» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆத்தூர் வெற்றிலை: வரலாற்று ஆவணக் குழுவின் விழிப்புணர்வுப் புத்தகம் வெளியீடு!

திங்கள் 6, ஏப்ரல் 2026 11:14:05 AM (IST)



பொருநை நாகரிகத்தின் வாழும் அடையாளமாகவும், உலகளவில் புவிசார் குறியீடு பெற்ற பெருமைக்குரியதாகவும் விளங்கும் ஆத்தூர் வெற்றிலையின் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில், 'Roots of Porunai' ஆவணக் குழு சார்பில் சிறப்பு விழிப்புணர்வுப் புத்தகம் வெளியிடப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளாக ஆத்தூர் வெற்றிலையின் வரலாறு மற்றும் அதன் சிறப்புகள் குறித்து இக்குழுவினர் மேற்கொண்ட தொடர் களப்பணி மற்றும் ஆய்வுகளின் முதற்கட்டமாக இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆத்தூரில் நடைபெற்ற இவ்விழாவினை, 'ஆத்தூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்கம்' மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தது.

அழிந்து வரும் வெற்றிலை விவசாயிகளின் வாழ்வியலை ஆவணப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்தப் புத்தகத்தினை, மேலாத்தூர் தொழிலதிபர் சந்திரசேகர் நாடார் (உதயஸ்ரீ சபரீசன் எண்டர்பிரைசஸ் - சென்னை) அவர்கள் வெளியிட்டார். இவ்விழாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க கீழ்க்காணும் முக்கிய அறிவிப்புகளை ஆவணக் குழுவினர் வெளியிட்டனர்:

மாநில அளவிலான போட்டிகள்: பொருநை நதிக்கரை நாகரிகம் மற்றும் ஆத்தூர் வெற்றிலைக் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் விதமாக, மாநில அளவிலான பிரம்மாண்டப் புகைப்படப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

ஆவணப்படம் மற்றும் காஃபி டேபிள் புத்தகம்: பல ஆண்டு உழைப்பில் உருவான 'திரைகடல் வியந்த திரையலை தேடி' எனும் பிரம்மாண்ட ஆவணப்படத்தின் முன்னோட்டமும் (Teaser), உயர்தரக் காஃபி டேபிள் புத்தகத்திற்கான (Coffee Table Book) அறிவிப்பும் வெளியிடப்பட்டன.

கல்விக்கான புரவலர் திட்டம்: ஆத்தூர் வெற்றிலை குறித்த இந்த அறிவுப் பொக்கிஷத்தைத் தமிழகம் முழுவதும் உள்ள 8,000 பள்ளிகள் மற்றும் பொது நூலகங்களுக்கு இலவசமாகக் கொண்டு சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காகப் பிரத்யேக 'புரவலர் திட்டம்' (Patron Scheme) மற்றும் நிதி திரட்டும் முன்னெடுப்பு விழாவில் தொடங்கி வைக்கப்பட்டது.

நமது தொன்மையான வேளாண் மரபைக் காக்கும் இந்த அறிவுசார் முயற்சிக்குப் பொதுமக்கள், பெருநிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது பேராதரவை வழங்க வேண்டும் என 'Roots of Porunai' குழுவினர் மற்றும் விவசாய சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory