» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கிள்ளிக்குளம் வேளாண் கல்லூரி தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி ஆட்சியரிடம் மனு
திங்கள் 16, பிப்ரவரி 2026 12:17:59 PM (IST)

கிள்ளிக்குளம் வ.உ.சி. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் பண்ணைத் தொழிலாளர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிக்குளம் வ.உ.சி. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் பண்ணைத் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு: கிள்ளிக்குளம் வ.உ.சி. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகிறோம்.
இவ்வளவு கால அனுபவம் இருந்தும் தங்களை இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. ஆண்டுக்கு 238 நாட்கள் கூட தங்களுக்குப் பணி வழங்கப்படுவதில்லை. இதற்குக் காரணம் கேட்டால் போதிய நிதி இல்லை என்று நிர்வாகத் தரப்பில் கூறுகின்றனர். ஒப்பந்தப் பணிகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கும் நிர்வாகம், தங்களுக்குப் பணி வழங்க நிதி இல்லை எனக் கூறுவது முரணாக உள்ளது.
தமிழக அரசின் அரசாணை 153-ன் அடிப்படையில், எங்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பண்ணைத் தொழிலாளர் சங்கம் சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆத்தூர் வெற்றிலை: வரலாற்று ஆவணக் குழுவின் விழிப்புணர்வுப் புத்தகம் வெளியீடு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:14:05 AM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி யாருக்கு? பலமுனை போட்டியால் வாக்குகள் சிதறும் நிலை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 10:33:25 AM (IST)

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு: அறுவடைப் பணியின்போது சோகம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 10:24:56 AM (IST)

செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனித் திருவிழா தொடக்கம்: ஏப்ரல் 13ல் தேரோட்டம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:20:49 AM (IST)

பைக் மீது அரசு பேருந்து மோதல்: இளைஞர் பலி!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:00:53 AM (IST)

ஆட்சியர் காரை மறித்து அவதூறு பேசிய வாலிபர்; கார் பறிமுதல் – போலீஸ் விசாரணை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 7:56:38 AM (IST)







