» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்ற வேண்டும் : பயணிகள் சங்கம் கோரிக்கை!
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:14:10 PM (IST)
திருவனந்தபுரம் - தாம்பரம் அம்ரித் பாரத் அதிவிரைவு ரயிலின் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இயக்கப்பட்டு வரும் வண்டி எண் 16122 திருவனந்தபுரம் சென்ட்ரல் – தாம்பரம் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், இரவு 23:45 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. இந்த அகால நேரத்தில் ரயில் நிலையம் வருவதால், பயணிகள் தங்களின் அடுத்தகட்ட பயணத்திற்காக அதிகாலை 4:00 முதல் 5:00 மணி வரை மாநகரப் பேருந்துகளுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளதாவது: "இந்த ரயிலில் பெரும்பாலும் குளிர்சாதன வசதி இல்லாத பெட்டிகளே அதிகம் என்பதால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வரும் குடும்பங்களே அதிகம் பயணிக்கின்றனர். நள்ளிரவில் தாம்பரம் வந்தடைவது அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சத்தை ஏற்படுத்துவதோடு, மிகுந்த உடல் உபாதைகளையும் தருகிறது."
வண்டி எண் 16122-ஐ திருவனந்தபுரத்திலிருந்து மதியம் சுமார் 15:30 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றி அமைத்தால், அது மறுநாள் அதிகாலை 4:00 மணியளவில் தாம்பரத்தை சென்றடையும். இது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதேபோல், வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வண்டி எண் 22658 நாகர்கோவில் – தாம்பரம் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை, சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நேர மாற்றங்கள் அமலுக்கு வந்தால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ஆயிரக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர வர்க்கப் பயணிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சென்டர் மீடியனில் பைக் மோதி வாலிபர் பரிதாப சாவு
வியாழன் 12, பிப்ரவரி 2026 9:35:41 PM (IST)

ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியரை கடித்த பாம்பு : விளாத்திகுளம் அருகே பரபரப்பு!
வியாழன் 12, பிப்ரவரி 2026 7:59:28 PM (IST)

தூய்மை பணியாளர் தற்கொலை: பாஸ்போர்ட்டை ஒப்படைக்க கோரிய முன்னாள் பேரூராட்சி தலைவியின் மனு தள்ளுபடி!
வியாழன் 12, பிப்ரவரி 2026 5:57:49 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 15,100 பேருக்கு சைக்கிள் வழங்கல் : ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
வியாழன் 12, பிப்ரவரி 2026 5:44:40 PM (IST)

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு : திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!
வியாழன் 12, பிப்ரவரி 2026 5:34:37 PM (IST)

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!
வியாழன் 12, பிப்ரவரி 2026 5:14:48 PM (IST)










