» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!

வியாழன் 12, பிப்ரவரி 2026 5:14:48 PM (IST)



தூத்துக்குடி சி.எம். மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடி ரெங்கநாதபுரத்தில் அமைந்துள்ள சி.எம். மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்குப் பள்ளிச் செயலாளர் வள்ளியம்மாள் திருச்சிற்றம்பலம் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை ச. சங்கரேஸ்வரி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

மாநில சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதாஜீவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிச் சிறப்புரையாற்றினார். இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 78 மாணவ-மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஜீவன் ஜேக்கப், தி. ஆறுமுகம், தி. சோமநாதன், செந்தில் உட்படப் பலர் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவாகத் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை கா. வள்ளியம்மாள் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory