» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!
வியாழன் 12, பிப்ரவரி 2026 5:14:48 PM (IST)

தூத்துக்குடி சி.எம். மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி ரெங்கநாதபுரத்தில் அமைந்துள்ள சி.எம். மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்குப் பள்ளிச் செயலாளர் வள்ளியம்மாள் திருச்சிற்றம்பலம் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை ச. சங்கரேஸ்வரி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மாநில சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதாஜீவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிச் சிறப்புரையாற்றினார். இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 78 மாணவ-மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஜீவன் ஜேக்கப், தி. ஆறுமுகம், தி. சோமநாதன், செந்தில் உட்படப் பலர் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவாகத் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை கா. வள்ளியம்மாள் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சென்டர் மீடியனில் பைக் மோதி வாலிபர் பரிதாப சாவு
வியாழன் 12, பிப்ரவரி 2026 9:35:41 PM (IST)

ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியரை கடித்த பாம்பு : விளாத்திகுளம் அருகே பரபரப்பு!
வியாழன் 12, பிப்ரவரி 2026 7:59:28 PM (IST)

தூய்மை பணியாளர் தற்கொலை: பாஸ்போர்ட்டை ஒப்படைக்க கோரிய முன்னாள் பேரூராட்சி தலைவியின் மனு தள்ளுபடி!
வியாழன் 12, பிப்ரவரி 2026 5:57:49 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 15,100 பேருக்கு சைக்கிள் வழங்கல் : ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
வியாழன் 12, பிப்ரவரி 2026 5:44:40 PM (IST)

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு : திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!
வியாழன் 12, பிப்ரவரி 2026 5:34:37 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வண்ண விளக்கு திட்டத்தில் முறைகேடு? விசாரணை நடத்த பாஜக வலியுறுத்தல்!
வியாழன் 12, பிப்ரவரி 2026 4:32:39 PM (IST)










