» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சென்டர் மீடியனில் பைக் மோதி வாலிபர் பரிதாப சாவு

வியாழன் 12, பிப்ரவரி 2026 9:35:41 PM (IST)

தூத்துக்குடியில் சாலைத் தடுப்பில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி முள்ளக்காடு ராஜுவ் நகர் 7ஆவது தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி மகன் சரண் டேவிட் (25). உப்பளத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இன்று மாலை வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். 

தூத்துக்குடி - திருச்செந்தூர் மெயின் ரோட்டில், ஸ்பிக் வளாகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனில் பலமாக மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட சரண் டேவிட், தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory