» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பலி: மற்றொருவர் படுகாயம்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 11:06:44 AM (IST)
தூத்துக்குடியில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் எழில் நகரைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து மகன் அஜித்குமார் (22), எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு, அஜித்குமார் ஸ்பிக் நகரில் உள்ள ஒரு கடையில் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
திருச்செந்தூர் சாலையில் அவர் திரும்பியபோது, எதிரே வந்த மற்றொரு பைக் அஜித்குமாரின் பைக் மீது பலமாக மோதியது. இந்த மோதலில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அஜித்குமார், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றொரு பைக்கில் வந்த முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் தனபால் (45) என்பவர் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பைக் விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் ஏஐ சிறப்பு உச்சி மாநாடு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 8:21:32 PM (IST)

இளைஞர்களுக்கு திறன், வேலைவாய்ப்பு பயிற்சி : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 5:46:27 PM (IST)

ஒருங்கிணைந்த காப்பக கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப் பரிந்துரை - அமைச்சர் கீதா ஜீவனுக்கு நன்றி
திங்கள் 9, பிப்ரவரி 2026 5:08:10 PM (IST)

டாஸ்மாக் ஊழியர்கள் 3 மணி நேரக் கடையடைப்புப் போராட்டம் : மதுப்பிரியர்கள் திண்டாட்டம்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 4:51:03 PM (IST)

மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : ஆட்சியர் நலதிட்ட உதவிகளை வழங்கினார்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 4:38:48 PM (IST)

தகுதியற்ற நிலையில் உள்ள அரசுப் பேருந்தை மாற்ற நடவடிக்கை : ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை !
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:53:19 PM (IST)









