» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் ஏஐ சிறப்பு உச்சி மாநாடு!

திங்கள் 9, பிப்ரவரி 2026 8:21:32 PM (IST)



புது டெல்லியில் நடைபெறவுள்ள 'இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சி மாநாடு 2026'-க்கு முன்னோட்டமாக, வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் சார்பில் இன்று தூத்துக்குடியில் சிறப்பு உயர்மட்ட நிகழ்வு நடைபெற்றது.

துறைமுகத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் தலைமை தாங்கினார். மத்திய அமைச்சகச் செயலாளர் விஜய் குமார் காணொளி வாயிலாகச் சிறப்புரையாற்றினார். இந்தியத் துறைமுகங்களின் செயல்திறன், பாதுகாப்பு மற்றும் உலகளாவிய போட்டித்திறனை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மேம்படுத்துதல். நேரடி செயல்விளக்கம்: துறைமுகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள AI பயன்பாடுகள் மற்றும் IoT தொழில்நுட்பங்கள் குறித்து நேரடி விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

டிஜிட்டல் ட்வின்ஸ், பிளாக்செயின் மற்றும் தானியங்கி பெர்த் மேலாண்மை, பணியாளர்களின் மறுதிறன் மேம்பாடு மற்றும் AI-க்கு இடையிலான ஒருங்கிணைப்பு, கொள்கை முடிவுகள் மற்றும் தரவுப் பாதுகாப்பில் AI-ன் பங்கு, மற்றும் இந்திய கடல்சார் துறையில் AI-க்கான ஒரு 'தேசிய சோதனைக்களமாக' வ.உ.சி துறைமுகத்தை முன்னிறுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, வரும் பிப்ரவரி 17 அன்று புது டெல்லி பாரத் மண்டபத்தில் "செயற்கை நுண்ணறிவால் இயங்கும் துறைமுகங்கள்" என்ற தலைப்பில் வ.உ.சி துறைமுகம் முக்கியக் கலந்துரையாடலை நடத்தவுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory