» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் ஏஐ சிறப்பு உச்சி மாநாடு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 8:21:32 PM (IST)

புது டெல்லியில் நடைபெறவுள்ள 'இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சி மாநாடு 2026'-க்கு முன்னோட்டமாக, வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் சார்பில் இன்று தூத்துக்குடியில் சிறப்பு உயர்மட்ட நிகழ்வு நடைபெற்றது.
துறைமுகத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் தலைமை தாங்கினார். மத்திய அமைச்சகச் செயலாளர் விஜய் குமார் காணொளி வாயிலாகச் சிறப்புரையாற்றினார். இந்தியத் துறைமுகங்களின் செயல்திறன், பாதுகாப்பு மற்றும் உலகளாவிய போட்டித்திறனை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மேம்படுத்துதல். நேரடி செயல்விளக்கம்: துறைமுகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள AI பயன்பாடுகள் மற்றும் IoT தொழில்நுட்பங்கள் குறித்து நேரடி விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
டிஜிட்டல் ட்வின்ஸ், பிளாக்செயின் மற்றும் தானியங்கி பெர்த் மேலாண்மை, பணியாளர்களின் மறுதிறன் மேம்பாடு மற்றும் AI-க்கு இடையிலான ஒருங்கிணைப்பு, கொள்கை முடிவுகள் மற்றும் தரவுப் பாதுகாப்பில் AI-ன் பங்கு, மற்றும் இந்திய கடல்சார் துறையில் AI-க்கான ஒரு 'தேசிய சோதனைக்களமாக' வ.உ.சி துறைமுகத்தை முன்னிறுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, வரும் பிப்ரவரி 17 அன்று புது டெல்லி பாரத் மண்டபத்தில் "செயற்கை நுண்ணறிவால் இயங்கும் துறைமுகங்கள்" என்ற தலைப்பில் வ.உ.சி துறைமுகம் முக்கியக் கலந்துரையாடலை நடத்தவுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இளைஞர்களுக்கு திறன், வேலைவாய்ப்பு பயிற்சி : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 5:46:27 PM (IST)

ஒருங்கிணைந்த காப்பக கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப் பரிந்துரை - அமைச்சர் கீதா ஜீவனுக்கு நன்றி
திங்கள் 9, பிப்ரவரி 2026 5:08:10 PM (IST)

டாஸ்மாக் ஊழியர்கள் 3 மணி நேரக் கடையடைப்புப் போராட்டம் : மதுப்பிரியர்கள் திண்டாட்டம்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 4:51:03 PM (IST)

மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : ஆட்சியர் நலதிட்ட உதவிகளை வழங்கினார்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 4:38:48 PM (IST)

தகுதியற்ற நிலையில் உள்ள அரசுப் பேருந்தை மாற்ற நடவடிக்கை : ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை !
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:53:19 PM (IST)

வானவில் போல தமிழக வெற்றி கழகமும் மறைந்து விடும்: கடம்பூர் செ. ராஜூ பேச்சு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:16:01 PM (IST)









