» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளியில் பனை விதைகள் விதைப்பு விழா

திங்கள் 22, டிசம்பர் 2025 9:33:47 PM (IST)



பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்து ஒன்று பனை விதைகள் விதைக்கும் விழா நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம்,குரும்பூர் அருகே உள்ள பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பனை மரத்தின் நன்மை கருதியும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டியும், பள்ளி மற்றும் பள்ளி சுற்றுப்புற பகுதி, பணிக்கநாடார்குடியிருப்பு, கீழ நாலுமாவடி பகுதிகளில் ஆயிருத்து ஒன்று பனைமர விதைகள் நடும் விழா நடந்தது. பள்ளி செயலாளர் முருகன் தலைமை வகித்தார். செல்வ விநாயகர் கல்வி அபிவிருத்திச்சங்க தலைவர் ராஜசேகர், பொருளாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

திருச்செந்தூர் வன சரக ரேஞ்சர் ஆத்திலிங்கம் பனை விதைகளை நட்டி விழாவை துவக்கி வைத்தார். இதில் தலைமையாசிரியர் (பொறுப்பு) சந்திரசேகர் மற்றும் குரும்பூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மம்முது, ஆங்கிலப்பள்ளி முதல்வர் டாக்டர் மௌலானா தேவி, ஏரல் வியாபாரி சங்க செயலாளர் விஜயராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை என்.சி.சி., அலுவலர் ராஜ்குமார், என்.எஸ்.எஸ்., அலுவலர் கண்ணன் பிரபு மற்றும் பசுமைப்படை அலுவலர் ராஜதுரை ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory