» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் தேசிய கணித தினம்

திங்கள் 22, டிசம்பர் 2025 5:44:42 PM (IST)



தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் கணித மேதை ராமானுஜன் பிறந்ததினத்தை முன்னிட்டு தேசிய கணித தினம் கொண்டாடப்பட்டது.

கணித மேதை இராமானுஜன் பிறந்த நாளான டிசம்பர் 22-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய கணித தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் தேசிய கணித தினம் இன்று கொண்டாடப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்து ராமானுஜரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கணித பயிற்சி ஆசிரியை திவ்யா ராமானுஜரின் வாழ்க்கை, கணித கண்டுபிடிப்புகள், 1729 என்ற எண்ணின் சிறப்புகள் குறித்து விளக்கி கூறினார். 

அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கணித வினாடி வினா போட்டிகள் நடைபெற்றன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கணித முதுகலைஆசிரியை பரிமளா, சரஸ்வதி, அந்தோணி ஆஸ்மின். பயிற்சி ஆசிரியைகள் உமா மகேஸ்வரி, இந்து இசக்கி, விஜயலட்சுமி. வள்ளிக்குட்டி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி ஆசிரியை விஜி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory