» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது

திங்கள் 22, டிசம்பர் 2025 8:33:25 PM (IST)

தூத்துக்குடியில் ஆடு திருடிய  2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி டி. சவேரியார் புரம் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் சேவியர் ஜெகன் மனைவி ஜெயலட்சுமி (40), இவர்  தனது வீட்டில் ஏராளமான ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 6ம் தேதி வீட்டு முன்பு மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டை இரண்டு பேர் பைக்கில் திருடி சென்றுவிட்டனர். அதன் மதிப்பு ரூ 10 ஆயிரம் ஆகும். 

இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி எஸ்எஸ் மாணிக்க புரத்தை சேர்ந்த அந்தோணி மகன் பிரவீன் குமார் (24), டி சவேரியார்புரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த ராஜ் மகன் விக்னேஷ்குமார் (25) ஆகிய 2பேரும் ஆட்டை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2பேரையும் கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory