» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை தொடர்பாக திமுக அரசின் அரசாணையை திரும்ப பெற வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்துபாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க), தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூபாய் 136.35 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் கட்டப்பட்டு வந்த பல்நோக்கு மருத்துவமனையை திமுக அரசானது "மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனையாக" மட்டும் மாற்றுவதாக வெளியிட்டுள்ள அரசாணைக்கு பாரதிய ஜனதா கட்சி கடுமையான கண்டனம் தெரிவிக்கிறது.
பல்நோக்கு மருத்துவமனைத் திட்டம் தொடங்கப்பட்டு, 95 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல்நோக்கு மருத்துவமனையானது இதய அறுவைசிகிச்சை, புற்றுநோய், சிறுநீரகப் பிரச்சனை, நரம்பியல் போன்ற பல்வேறு நோய்களுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கவும், அதிநவீன மருத்துவ வசதி பெறவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.
இந்த நடவடிக்கை தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி, மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புக்கு மாறாக அதன் நோக்கத்தை மாற்றுவது அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயல். திமுக அரசின் இந்த முடிவு, மக்களின் அடிப்படைத் தேவையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கையாகத் தெரியவில்லை என்றும், மாறாக தனியார் மருத்துவ நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான செயலாகத்தான் தெரிகிறது.
மேலும், மத்திய அரசின் நிதிப் பங்களிப்பு அதிகம் இருப்பதால், இதன் வெற்றி பா.ஜ.க. அரசுக்கு நற்பெயர் ஈட்டித் தந்துவிடுமோ என்ற காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்தத் திட்டம் புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அவர்களின் கனவான 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கை அடைய, தூத்துக்குடி மாவட்டத்திற்குப் புதிய விமான நிலையம், துறைமுக விரிவாக்கம், கப்பல் கட்டும் தளம், குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் போன்ற பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.
திமுக அரசானது பல்நோக்கு மருத்துவமனைத் திட்டத்தை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றும் அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். 95 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்த கட்டடத்தில், உடனடியாகப் பல்நோக்கு மருத்துவமனைக்கான அனைத்துச் சிறப்பு மருத்துவர்களையும் நியமித்து, அதிவிரைவில் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், தெற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் கடுமையான சட்டப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)

தூத்துக்குடியில் மீன்கள் விலை கிடுகிடு உயர்வு : கிலோ ரூ.1,300-க்கு விற்பனை
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:26:19 AM (IST)










