» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

சனி 13, டிசம்பர் 2025 5:24:01 PM (IST)



தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் பழிவாங்கும் நோக்கில் நடைபெற்ற பணியிடமாற்ற ஆணையினை இரத்து செய்ய வேண்டும், 3 ஆண்டு பணி முடித்த அலுவலர்களுக்கு எந்தவித அரசியல் நிர்பந்தமும் இன்றி அவரவர் விருப்பத்தின் பேரில் பணியிட மாறுதல் ஆணை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு மாலைநேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சு.மாரிராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா.செல்வக்குமார், கோரிக்கை விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் தே.முருகன், மேனாள் துணை பொது செயலாளர் வெங்கடேசன், சங்க நிர்வாகிகள் சங்கர், தவமணி பீட்டர், மனோகரன் உள்ளிட்டோர் வாழ்த்திப்பேசினர்.

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் அ.சாம் டேனியல் ராஜ் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் கண்டன உரையாற்றினார். ஆர்பாட்டத்திற்கு மாவட்டம் முழுமையும் உள்ள கூட்டுறவுத்துறை ஊழியர்கள் பெருவாரியாக கலந்துகொண்டனர். மாவட்ட பொருளாளர் த.பிரபாவதி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory