» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஸ்டால் இன் மால் விற்பனை கண்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்
சனி 13, டிசம்பர் 2025 3:13:37 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டால் இன் மால் விற்பனை கண்காட்சியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் முதன்முறையாக தூத்துக்குடியில் ஸ்டால் இன் மால் என்ற திட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூட கூடிய வணிக வளாகத்தில் விற்பனை அங்காடிகளை அமைக்கும் திட்டத்தினை நபார்டு வங்கியின் உதவி மேலாளர் சுரேஷ் ராமலிங்கம் முன்னிலையில், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனை அங்காடிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து பல்வேறு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நபார்டு வங்கியின் மூத்த பொது மேலாளர் ஆர். ஆனந்த் பேசுகையில் "பெண்களின் பொருளாதார மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்காகநபார்டு வங்கி மூலமாக தமிழகத்தில் சுய உதவி குழு பெண்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டதன் மூலமாக 12,000 க்கு மேற்பட்ட சுய உதவி குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தொடர்ந்து ஸ்டார்ட் அப் திட்டத்தில் அதிகமானோர் தொழில் தொடங்கியுள்ளனர். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சந்தைப்படுத்துவதை எளிதாக்குவதற்காகமத்திய, மாநில அரசு வணிக இணைய தளத்தில் அவர்களை இணைத்துள்ளோம்.
மேலும் எங்கே எந்த கண்காட்சி நடந்தாலும் நபார்டு விற்பனை அங்காடிகள் அமைக்கப்பட்டு வருகின்றது. தற்போது மக்கள் கூடும் இடங்களில் ஸ்டால் இன் மால் என திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிகளும் தயாரிக்கப்படும் உற்பத்தி பருக்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுக் கொடுப்பது மூலமாக அந்த பொருட்களின் மதிப்பு உயர்கிறது அதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 13 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கையை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










