» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் விபத்து: எல்லை பாதுகாப்பு படை வீரர் பலி

சனி 13, டிசம்பர் 2025 10:25:42 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் எல்லை பாதுகாப்புபடை வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் இளங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் கணபதி மகன் பாலமுருகன் (49). இவரது மனைவி சரணிகா. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பாலமுருகன் (49). பஞ்சாப் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையில் (BSF) பணிபுரிந்து வருகிறார். தற்போது விடுமுறையில் அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில், நேற்று இவர் தனது பைக்கில் மெஞ்ஞானபுரத்தில் இருந்து விளாத்திகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். தருவைகுளம் அருகே செல்லும் பொழுது எதிரே வந்த வேன், அவரது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தருவைக்குளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, வேனை ஓட்டி வந்த தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் சுடலைமுத்து மகன் கொம்பையா (35) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory