» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லாரிகள் மோதி விபத்து: டிரைவர் உயிரிழப்பு!

சனி 13, டிசம்பர் 2025 8:56:07 AM (IST)

கோவில்பட்டி அருகே லாரி மீது மினி கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், தெனவிளை, வில்லுக்குறியைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் ராபர்ட் (46), லாரி ஓட்டுநர். இவர், அருப்புக்கோட்டையில் இருந்து லாரியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இடைச்செவல், பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மினி கண்டெய்னர் லாரி மோதியது.

இதில், லாரி சாலையின் தடுப்புச் சுவரைத் தாண்டி அணுகு சாலை அருகேயுள்ள ஓடையில் கவிழ்ந்தது. இதில், திருவள்ளூர் மாவட்டம், போரூர், காரம்பாக்கம், அருணாச்சல முதல் தெருவைச் சேர்ந்த மினி கண்டெய்னர் லாரி ஓட்டுநர் சு. துரைராஜ் (48) பலத்த காயமடைந்தார்.

அருகிலிருந்தவர்கள், அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory