» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொங்கராயகுறிச்சி கோவிலில் மஹாதேவ அஷ்டமி வழிபாடு
வெள்ளி 12, டிசம்பர் 2025 5:38:10 PM (IST)

கொங்கராயகுறிச்சி பொன்னுறுதி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபாண்டீஸ்வரர் திருக்கோவிலில் மஹாதேவ அஷ்டமி வழிபாடு இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஶ்ரீவைகுண்டம் தாலுகா, கொங்கராயகுறிச்சி ஶ்ரீ பொன்னுறுதி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபாண்டீஸ்வரர் திருக்கோவிலில் மஹாதேவ அஷ்டமி வழிபாடு இன்று நடைபெற்றது. பைரவரின் அவதார தினமான கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி மஹாதேவ அஷ்டமி எனப்படும். 64 பைரவர்களின் அம்சமாக விளங்கும் ஶ்ரீ சட்டைநாத சுவாமி மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஶ்ரீ திருநிலைநாயகி அம்பாள் சமேத ஶ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் மற்றும் கொங்கராயகுறிச்சிஶ்ரீ பொன்னுறுதி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபாண்டீஸ்வரர் திருக்கோவில் ஆகிய இடங்களில் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகின்றார்.
மஹாதேவ அஷ்டமி அன்று காலை 08:30 மணியளவில் மங்கல இசையுடன் வழிபாடு துவங்கியது. காலை 09:00 மணியளவில் சங்கலபம், விநாயகர் வழிபாடு, கலசபூஜை மற்றும் வேதபாராயணம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாள் மற்றும் சட்டைநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும் கலச அபிஷேகமும் நடைபெற்றது. பகல் 12:00 மணியளவில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், சட்டைநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் ஸமாராதனை நடைபெற்றது. நிறைவாக அன்னதானம் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை கொங்கராயகுறிச்சி ஶ்ரீ வீரபாண்டீஸ்வரர் சமேத ஶ்ரீ பொன்னுறுதி அம்பாள் தேவஸ்தான பூஜா கைங்கர்ய ஸ்தானீகர் குணசேகர பட்டர், அறங்காவலர் ஆறுமுகநேரி சோ.தியாகராஜன் மற்றும் சட்டநாத சுவாமி பக்தர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










