» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி கல்லூரியில் இயற்கை மருத்துவம், யோக அறிவியல் சிறப்பு கருத்தரங்கம்
வெள்ளி 12, டிசம்பர் 2025 5:10:48 PM (IST)

கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் குறித்த விழிப்புணர்வு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியின் அம்சமாக, கோவை ஜெ.எஸ்.எஸ் கல்லூரியின் இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் துறை பேராசிரியர் சோபிகா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா குறித்த விழிப்புணர்வு உரைகளை வழங்கினர்.
மேலும் அவர் கூறுகையில் ஆரோக்கியமான மற்றும் தரமான தூக்கம் குறித்தும் ஆரோக்கியமான உணவு முறை குறித்தும் மாணவர்களுடன் கலந்துரையாற்றினார். அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.
கருத்தரங்கில் ஜெ.எஸ்.எஸ் கல்லூரி மாணவி செல்வி. வார்சா உட்பட ஜெ.எஸ்.எஸ் கல்லூரியின் மாணவிகள் மற்றும் எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியின் மாணவர்-மாணவியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முன்னதாக ஆங்கிலத்துறையின் மூன்றாமாண்டு மாணவி கார்த்திகா வரவேற்றார். நிறைவாக ஆங்கிலத்துறையின் இரண்டாமாண்டு மாணவி லாவண்யா நன்றியுரை வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










