» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிவன் கோவிலில் ஸ்ரீ மஹாதேவாஷ்டமி வைபவம் : திரளான பக்தர்கள் தரிசனம்

வெள்ளி 12, டிசம்பர் 2025 3:58:19 PM (IST)



தூத்துக்குடி சிவன் கோவிலில் ஸ்ரீ மஹாதேவாஷ்டமி வைபவம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் ஸ்ரீ மஹாதேவாஷ்டமி வைபவம் இன்று காலை நடைபெற்றது. அஷ்டமியில் பைரவரை வணங்குவது இன்னும் விசேஷம். அதிலும் கார்த்திகை மாதத்தின் அஷ்டமி மகாதேவாஷ்டமி என்றும் பைரவாஷ்டமி என்றும் போற்றப்படுகிறது. இதையொட்டி டிச.11 மற்றும் 12ஆம் தேதிகளில் மங்கள வாத்தியம், சொற்பொழிவு, மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. 

இன்று வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு மேல் சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், ஏகாதச ருத்ர பாராயணம், 8.00 மணிக்கு மேல் மூல மந்த்ர ஹோமம், திரவ்யாகுதி, வஸ்திராகுதி வஸோத்தாரா, மகா பூர்ணாகுதி, தீபாராதனை சுவாமி அம்பாள், பைரவர் மகாபிஷேகம், கலசாபிஷேகம், பஞ்சமுகார்ச்சனை, பிற்பகல் 12.30 மணிக்கு மேல் மகா தீபாராதனை நடைபெற்றது.  



பூஜைகளை சிவன் கோவில் பிரதான பட்டர் செல்வம் நடத்தினார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory