» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் டிச.14ஆம் தேதி மாரத்தான் போட்டி: டி.டி.வி. தினகரன் பிறந்தநாள் விழா ஏற்பாடு!
வெள்ளி 12, டிசம்பர் 2025 3:09:39 PM (IST)

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டியில் வரும் 14ஆம் தேதி மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வரும் 14ஆம் தேதி RUN FOR CHANGE என்ற பெயரில் மாபெரும் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத போட்டியில் கலந்து கொள்ள முன்பதிவு செய்துள்ள வீரர்களுக்கு டோக்கன் கொடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் 17 வயதுக்கு மேல், 17 வயதுக்கு கீழ் ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் என்று 4 பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது. 17 வயதுக்கு மேல் ஆண்கள் போட்டியில் முதலிடம் பெறுவதற்கு ஒரு லட்ச ரூபாயும், பெண்கள் பிரிவில் வருடம் பெறுவதற்கு ரூ.75 ஆயிரமும், 17 வயதுக்கு கீழ் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு போட்டியிலும் வருடம் பெறுபவருக்கு ரூ.25 ஆயிரம் ரூபாய் என வழங்கப்பட உள்ளது.
முதல் 10 இடங்களை பெறுவதற்கு பரிசு தொகையும், போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பிறந்த நாளின் போது கோவில்களில் வழிபாடு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு மாணவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்கும் வகையில் மராத்தான் போட்டி ஏற்பாடு செய்துள்ளோம். இதனை ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்நிகழ்வில், மாநில மகளிர் அணி ஜீவிதா நாச்சியார், அமமுக வடக்கு மாவட்ட செயலாளர் பூலோக பாண்டியன், அவைத்தலைவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவபெருமாள், அமிர்தராஜ் பாண்டியன், நகர செயலாளர் என்.எல்.எஸ்.செல்வம், ஒன்றிய செயலாளர்கள் கணபதி பாண்டியன், ஈஸ்வர பாண்டியன், விஜயபாஸ்கர், மகேந்திரன், மாவட்ட துணை செயலாளர் கிழவிபட்டி குமார் பாண்டியன், ஜெ.பேரவை மாவட்ட பொறுப்பாளர் லட்சம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










