» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மளிகை கடையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு :மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

வெள்ளி 12, டிசம்பர் 2025 8:14:02 AM (IST)

தூத்துக்குடியில் மளிகை கடையை உடைத்து பணம், பொருட்கள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு நேருஜி நகரை சேர்ந்தவர் ரத்தினதுரை (70). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். அன்று நள்ளிரவில் மர்மநபர்கள், மளிகை கடையின் ஷட்டர் பூட்டை கடப்பாரையால் உடைத்துள்ளனர். 

ஒரு பகுதி உடைபட்ட நிலையில் மறுபகுதி பூட்டு உடையாததால், ஷட்டரை வளைத்து உள்ளே சென்று பணப்பெட்டியில் வைத்திருந்த 50 பத்து ரூபாய் நாணயங்கள், குளிர் பானங்கள், சிப்ஸ், பிஸ்கட் வகைகள் உள்ளிட்ட சுமார் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

நேற்று காலையில் வழக்கம் போல் கடையை திறக்க வந்த ரத்தினத்துரை மளிகை கடை உடைக்கப்பட்டு, பொருட்கள் திருடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கடையில் திருடிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory