» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மளிகை கடையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு :மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:14:02 AM (IST)
தூத்துக்குடியில் மளிகை கடையை உடைத்து பணம், பொருட்கள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு நேருஜி நகரை சேர்ந்தவர் ரத்தினதுரை (70). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். அன்று நள்ளிரவில் மர்மநபர்கள், மளிகை கடையின் ஷட்டர் பூட்டை கடப்பாரையால் உடைத்துள்ளனர்.
ஒரு பகுதி உடைபட்ட நிலையில் மறுபகுதி பூட்டு உடையாததால், ஷட்டரை வளைத்து உள்ளே சென்று பணப்பெட்டியில் வைத்திருந்த 50 பத்து ரூபாய் நாணயங்கள், குளிர் பானங்கள், சிப்ஸ், பிஸ்கட் வகைகள் உள்ளிட்ட சுமார் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
நேற்று காலையில் வழக்கம் போல் கடையை திறக்க வந்த ரத்தினத்துரை மளிகை கடை உடைக்கப்பட்டு, பொருட்கள் திருடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கடையில் திருடிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










