» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம்: டிச.13ல் செயற்குழு உறுப்பினர் தேர்தல்!
வியாழன் 11, டிசம்பர் 2025 4:02:26 PM (IST)
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் நான்காவது கட்டமாக 6 சபை மன்றங்களில் வைத்து திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள் தேர்தல் வருகிற 13ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது.
கடந்த 27.10.2025 தேதியிட்ட சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை பெஞ்ச் உத்தரவின்படி தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல நிர் வாகியாக மீண்டும் நீதிபதி ஜோதி மணி பொறுப்பேற்று தேர்தல்களை கடந்த 3.9.2025 அன்று விட்ட இடத்தில் இருந்து தொடர வேண்டும் என்ற உயர்நீதி மன்ற உத்தரவின் அடிப்படையில், புதிய தேர்தல் அட்டவணையை வெளியிட்டார்.
அதன்படி, முதல் மூன்று கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் நான்காம் கட்டமாக தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல சபைமன்ற நிர்வாகிகளுக்கான தேர்தல் 13 ந் தேதி சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு 6 சபைமன்றங்களிலும் நடைபெறுகிறது.
கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்றத்தின் தேர்தல் அதிகாரியும் சபைமன்றத் தலைவமான ஏசுவடியான் துரைச்சாமி தலைமையில் நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்தும்,இராக்லாண்ட் சபை மன்றத்தின் தேர்தல் அதிகாரியும் சபைமன்றத் தலைவருமான தேவராஜன் தலைமையில் கே.கைலாசபுரத்தில் வைத்தும்,
பேராயர் இராபர்ட் கால்டுவெல் சபை மன்றத்தின் தேர்தல் அதிகாரியும் சபைமன்றத் தலைவருமாகி குரோவ்ஸ் பர்னபாஸ் தலைமையில் பிரையண்ட்நகரில் வைத்தும், டாக்டர் ஜி.யு. போப் சபைமன்றத்தின் தேர்தல் அதிகாரியும் சபைமன்றத் தலைவருமாகிய பிரின்ஸ் குமார் தலைமையில் சேர்வைக்காரன்மடத்தில் வைத்தும்,
சுவிஷேசகர் தாவீது சுந்தரானந்தனார் சபைமன்றத்தின் தேர்தல் அதிகாரியும் சபைமன்றத் தலைவருமாகிய செல்வன் மகாராஜா தலைமையில் முதலூரில் வைத்தும், ஜாண் தாமஸ் சபை மன்றத்தின் தேர்தல் அதிகாரியும், சபைமன்றத் தலைவருமாகிய டேனியல் ஞானப்பிரகாசம் தலைமையில் கிறிஸ்டியான்நகரத்தில் வைத்தும் இச் சபைமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் சபைமன்ற செயலர், திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள் தேர்தல், சேகர மற்றும் திருமண்டல ஊழியர்களுக்கான திருமண்டல பெறுமன்ற பிரதிநிதிகள் தேர்தல் மற்றும் நிலைவர குழுக்களுக்கான தேர்தல்கள் நடைபெறுகிறது.
இறுதி கட்டமாக டிசம்பர் 30, 31 ஆகிய தேதிகளில் நாசரேத்தில் வைத்து திருமண்டல பெருமன்ற கூட்டம் நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல நிர்வாகிகளான உபதலைவர், லே செயலர், குருத்துவ காரியதரிசி, திருமண்டல பொருளாளர் ஆகியோருக்கான தேர்தல்கள் நடைபெறுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










