» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம்: 530 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது!

திங்கள் 3, நவம்பர் 2025 3:54:12 PM (IST)



தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, கலைஞரின் கனவு இல்லம், தொழில் கடனுதவி, முதியோர், விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 530 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 

பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்கள். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 37 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார். 

அதனைத் தொடர்ந்து, மக்கள் குறை களையும் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் கருணை அடிப்படையில் 1 அலுவலக உதவியாளர் மற்றும் 2 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணையினை ஆட்சியர் வழங்கினார். 

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தமிழரசி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், துணை ஆட்சியர் (பயிற்சி) மகேந்திரன் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

சண்முகம்Nov 8, 2025 - 08:38:28 AM | Posted IP 104.2*****

தெரு நாய்கள் கடிக்க வெறிபிடிக்க காரணம் மாநில அரசு மாசு கட்டுப்பாட்டு துறை மற்றும் சுகாதாரத்துறை மற்றும் கழிவு நீர் மேலாண்மை மற்றும் மழைநீர் வடிகால் வாரியமே ?. மாநில அரசுக்கு கொசுக்களை அழிப்பதாக மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் கலக்கும் மருந்து ஊற்றுவதால் தண்ணீர் தரம் கெடுகிறது நச்சு மாசடைகிறது தெருவில் திரியும் நாய்கள் மாடுகள் பறவைகளுக்கு என குடிநீர் அரசு ஊராட்சி நிர்வாகம் வழங்கவில்லை. மக்கள் பயன்படுத்தும் மருந்து ஊற்றிய சாலைகளில் மருந்து பொடி தெறித்த நீரையும் கழிவுநீர் வாய்க்கால் நீரை பருகுவதால் தாகம் தீராமலும் வெப்ப நோய்கள் தாக்கத்திற்கு ஆளாவதால் தண்ணீர் தாகத்தின் தேவையால் வெறிபிடித்து கடிக்கிறது. குற்றம் மாநில எல்லையில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கு நலனுக்காக செயல்படாத அரசு மற்றும் அரசாங்கத்தின் உடையது . தீர்வு மருந்திற்கு பதிலாக சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டால் கொசு முட்டை உற்பத்தி கட்டுப்படும் நலனும் பேணப்படும் நீர்நிலை மாசடைவது குறையும் . நீரில் உள்ள கனிமசத்துக்கள் குறையாது மாறுபடாது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory