» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஏழு தலைமுறைத் துயரத்துக்கு நிரந்தர முற்றுப்புள்ளி : ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை!
திங்கள் 3, நவம்பர் 2025 3:39:24 PM (IST)

திருவைகுண்டம் அருகே ஏழு தலைமுறைகளாக நீடிக்கும் சுடுகாடு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் அளித்த மனுவில், "திருவைகுண்டம் தாலுகாவில் உள்ள கீழ்பிடாகை வரதராஜபுரம் மற்றும் திருபுளியங்குடி ஆகிய இரண்டு ஊராட்சிப் பிரிவுகளைச் சேர்ந்த நளன்குடி (இசக்கியம்மன்புரம்) மற்றும் சுந்தரபாண்டியபுரம் கிராம மக்களுக்கும் தனி சுடுகாட்டுக்கான (இடுகாடு) நிலம் ஒதுக்கப்படவில்லை.
இடமின்மை காரணமாக, இறந்த உடலின் மேலே மீண்டும் இறந்த உடலை புதைக்கும் அதிர்ச்சியூட்டும் அவலம் நீடிக்கிறது. இது இறந்தவர்களின் கண்ணியத்தை சிதைப்பதுடன், எங்கள் ஓட்டுமொத்த மக்களின் மன அமைதிக்கும், பொது சுகாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலை அளிக்கிறது.
இதுகுறித்து பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் அளிக்கப்பட்டும், அரசியல் கட்சிகளால் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டும் இன்று வரை எந்தவிதமான தீர்வும் கிடைக்கவில்லை. எனவே, இந்த ஏழு தலைமுறைத் துயரத்துக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கிராம மக்களுக்குப் போதுமான அளவு சுடுகாட்டுக்கான நிலத்தை உடனடியாக ஒதுக்கீடு செய்து ஆணை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையர்கள் தினம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:05:40 AM (IST)

காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு மாசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:00:23 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் பைக் திருட்டு : மர்ம நபர் கைவரிசை
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:33:13 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)










