» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மின்வாரிய டவர் மீது ஏறி மாற்றுத்திறனாளி வாலிபர் தற்கொலை மிரட்டல்

திங்கள் 3, நவம்பர் 2025 3:10:16 PM (IST)


தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி வாலிபர் மின்வாரிய டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகா கீழநம்பிபுரம்,  கீழத்தெருவைச் பரமசிவன் மகன் முனியசாமி (30), கண்பார்வை தெரியாத மாற்றுத்திறனாளி. இவர் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான செல்போன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் விரக்தியில் இருந்த அவர், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது அவர்,  ஆட்சியர் அலுவலகத்தின் பின்பகுதியில் ஆர்டிஓ அலுவலகம் அருகில் சுமார் 200 மீட்டர் தொலைவில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள டிடிபிஎஸ் முதல் கயத்தாறு வரை செல்லும் 230 கேவி உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்து புதியம்புத்தூர் காவல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் சிப்காட் உதவி ஆய்வாளர் ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்தில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் கீழே இறங்க மறுத்ததால் உதவி ஆய்வாளர் ரத்தினவேல் பாண்டியன் டவரில் ஏறி அவரை மீட்டு கீழே அழைத்து வந்தார். பின்னர் அவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க அழைத்துச் செல்லப்பட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory