» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் ஊஞ்சல் திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
திங்கள் 3, நவம்பர் 2025 8:38:53 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் கள்ளபிரான் சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
நவதிருப்பதி கோவில்களில் முதல் திருப்பதியான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் ஊஞ்சல் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் 5 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஊஞ்சல் திருவிழா நடைபெற்று வருகிறது. இத் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம், காலை 8.30 மணிக்கு திருமஞ்சனம், காலை 10 மணிக்கு நித்தியல் கோஷ்டி நடந்தது.
மாலை 6 மணிக்கு சாயரட்சை, மாலை 6.30 மணிக்கு உற்சவர் கள்ளபிரான் சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். தொடர்ந்து சாத்துமுறை நடந்தது. பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி, பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாத்தான்குளம் பள்ளியில் தேசிய இரட்டையர்கள் தினம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:05:40 AM (IST)

காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீடு மாசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:00:23 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வாகன காப்பகத்தில் பைக் திருட்டு : மர்ம நபர் கைவரிசை
வெள்ளி 19, டிசம்பர் 2025 10:33:13 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)










