» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவில் குறித்து புகார் தெரிவித்த பாஜக பிரமுகர் கைது: பா.ஜ.கவினர் ஆறுதல்!

திங்கள் 22, செப்டம்பர் 2025 12:37:30 PM (IST)



திருச்செந்தூர் கோவில் சீர்கேடுகளை வெளிப்படுத்தியதால் கைதான  பாஜக பிரமுகருக்கு கட்சி நிர்வாகிகள் ஆறுதல் தெரிவித்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் முருகன் கோவிலில் பக்தர்களிடம் பணம் பெற்று கொண்டு, கோவில் சண்முகவிலாசம் மண்டபம் வழியாக கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதுதொடர்பாக, கோவில் உள்துறை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி திருச்செந்துார் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் திருச்செந்துாரை சேர்ந்த இந்து முன்னணி நகர துணை தலைவர் செந்தில்குமார்,  மணிகண்டன், பிரித்திவிராஜ் ஆகிய மூவர் மீது வழக்கு பதிந்தனர். இந்நிலையில், திருச்செந்தூர் கோவில் சீர்கேடுகளை வெளிப்படுத்திய பாஜக பிரமுகர் செந்தில் குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜக மாநில விவசாய அணி செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் மற்றும் நிர்வாகிகள் செந்தில்குமார் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory