» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம் : மனைவி, 3 குழந்தைகள் பரிதவிப்பு!

திங்கள் 22, செப்டம்பர் 2025 11:58:14 AM (IST)



தூத்துக்குடியில் கடலுக்கு சென்ற மீனவர் காணாமல் போன நிலையில் அவரது குடும்பத்திற்கு அரசின் நலதிட்ட உதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த காளிமுத்து மனைவி என்பவர் தனது உறவினர்கள் மற்றும் அண்ணா சங்குகுளி தொழிலாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், துாத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த காளிமுத்து அண்ணா சங்குகுளி தொழிலாளர். இவர் தருவைக் குளத்தைச் சேர்ந்த மிக்கேல் ஆரோக்கியம் மகன் தினேஷ்சிங் என்பவருக்குச் சொந்தமான மீன்பிடி விசைப்படகில் கடந்த 19.8.2025 அன்று தங்கு கடலுக்கு சென்றபோது காணாமல் போய்விட்டார். 

இதுகுறித்து கடலோர காவற்படையிலும் புகார் செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கையும் பெறப்பட்டுள்ளது. ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுநாள் வரையிலும் எந்தவிதமான தகவலும் இல்லை. இதனால் குடும்பம் அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் பரிதவித்துக் கொண்டிருக்கிறது. அவரது இறப்பை உறுதி செய்து இறப்பு சான்றிதழ் வழங்கவும், மீனவ குடும்பத்திற்கு கிடைக்கப் பெற வேண்டிய அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் குழந்தைகளுக்குரிய கல்வி நலநிதி ஆகியவைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory