» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நடுவிற்பட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மழைவளம் வேண்டி கஞ்சி கலய ஊர்வலம்!

ஞாயிறு 21, செப்டம்பர் 2025 6:49:13 PM (IST)



நடுவிற்பட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மழைவளம் வேண்டி கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது.

மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களின் பேரருளுடன் எட்டையபுரம் நடுவிற்பட்டி மெயின்ரோட்டில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆடிப்பூர விழா சிறப்பான முறையில் நடைபெற்றது.

மழைவளம் வேண்டியும், விவசயம் செழிக்கவும், தொழில்வளம் பெருகவும், மக்கள் நலமுடன் வாழவும் வேண்டி மாபெரும் கஞ்சிக்கலயம் மற்றும் தீச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை ஆன்மிக இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி. முருகன் தொடங்கிவைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக மன்றத்தை வந்தடைந்தது.

 கஞ்சி வார்ப்பு நிகழ்ச்சியை மன்ற தலைவர் சக்தி.சிவகாமி துவக்கி வைத்தார். முன்னதாக நடைபெற்ற கலச விளக்கு வேள்வி பூஜையை மாவட்ட மகளிர் ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். அன்னதான நிகழ்ச்சியை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் துவக்கி வைத்தார். விழாவில், கோவில்பட்டி மன்ற தலைவர் அப்பாசாமி, தகவல் தொழில் நுட்ப பொறுப்பாளர் கோபிநாத், மன்ற நிர்வாகிகள் ராஜதுரை, லெட்சுமி, மாரியம்மாள், பத்மாவதி, லெட்சுமி அம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

கனிராஜ்Sep 21, 2025 - 09:52:22 PM | Posted IP 104.2*****

இயற்கை வழிபாடு. இயற்கை வழிபாட்டினால் அனைத்து வளமும் செழிக்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory