» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டியவருக்கு 2½ ஆண்டுகள் சிறை!

வெள்ளி 11, ஜூலை 2025 7:33:21 PM (IST)

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 2½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் கைலாசபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் கணேஷ் ராஜ்குமார் (எ) சதீஷ் (43/25) என்பவர் கடந்த 2023ம் ஆண்டு பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் சாயர்புரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷ் ராஜ்குமார் (எ) சதீஷை கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி (09.07.2025) குற்றவாளி கணேஷ் ராஜ்குமார் (எ) சதீஷ் என்பவருக்கு 2½ ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட உதவி அரசு தரப்பு வழக்கறிஞர் முருகப்பெருமாள் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் ஜேசு ராஜா ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory