» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டியவருக்கு 2½ ஆண்டுகள் சிறை!
வெள்ளி 11, ஜூலை 2025 7:33:21 PM (IST)
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 2½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் கைலாசபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் கணேஷ் ராஜ்குமார் (எ) சதீஷ் (43/25) என்பவர் கடந்த 2023ம் ஆண்டு பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் சாயர்புரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷ் ராஜ்குமார் (எ) சதீஷை கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி (09.07.2025) குற்றவாளி கணேஷ் ராஜ்குமார் (எ) சதீஷ் என்பவருக்கு 2½ ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட உதவி அரசு தரப்பு வழக்கறிஞர் முருகப்பெருமாள் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் ஜேசு ராஜா ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










