» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் : கனிமொழி எம்பி பங்கேற்பு!

செவ்வாய் 8, ஜூலை 2025 3:22:35 PM (IST)


கோவில்பட்டி, எட்டயபுரத்தில் நடைபெற்ற திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கனிமொழி எம்பி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டியில் சட்டமன்றத் தொகுதி பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் எட்டயபுரத்தில் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் கலைமாமணி விருது பெற்ற வில்லிசை கலைஞர் வேல்சாமி மறைவையடுத்து, கழுகுமலையில் உள்ள அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, அதனைத் தொடர்ந்து, கோவில்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகரக் கழக அலுவலகத்தை நேரில் சென்று கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.


இந்நிகழ்ச்சிகளில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான  கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, நகரச் செயலாளர் கருணாநிதி, நகரப் பொறுப்பாளர் சுரேஷ், தொகுதி பொறுப்பாளர்கள் கணேசன், பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory