» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் படகுடன் பறிமுதல்!

செவ்வாய் 8, ஜூலை 2025 7:23:38 AM (IST)



தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  

தூத்துக்குடி தாளமுத்து நகர் விவேகானந்தர் காலனி கடற்கரையில் இன்று  அதிகாலை  கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி உதவி ஆய்வாளர் ஜீவ மணி தர்மராஜ் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜ், குமார் இசக்கி முத்து, காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் ரோந்து பணில் ஈடுபட்டனர்.

அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக டபுள் இன்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகில் சுமார் 30 கிலோ வீதம் 40 மூட்டைகளில் பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. மேலும் போலீசாரை கண்டதும் பீடி இலைகளை கடத்த முயன்றவர்கள் தப்பி ஓடி விட்டார்கள். இதையடுத்து சுமார் ரூ.40 இலட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், பைபர் படகு மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை போலீசார் சுங்கத்துறை வசம் ஒப்படைத்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory