» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோயிலில் இன்று பகல் 12 மணி வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி!
ஞாயிறு 6, ஜூலை 2025 9:02:06 AM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணி வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை (ஜூலை 7) நடைபெறும் குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழாவுக்காக 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களும், குடமுழுக்கு விழாவை அனைத்து பகுதிகளிலிருந்து காணும் வகையில் எல்இடிபெரிய திரைகளும் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ளன.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 6,000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், 25 மருத்துவக் குழுக்களும், 27 இடங்களில் தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்படுகின்றன.
குடமுழுக்கு விழா பணிகளுக்காக 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர். சாதாரணமாக திருக்கோயில்களில் மருந்து சாத்திய பிறகுதான் குடமுழுக்கு நடைபெறும். திருச்செந்தூர் திருக்கோயிலில் குடமுழுக்கு நடந்த பின்னரே மருந்து சாத்தும் நிகழ்வு நடைபெறுவது மரபாக உள்ளது.
இதை முன்னிட்டு பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) பகல் 12 மணிவரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு 7ஆம் தேதி குடமுழுக்கு நிறைவு பெற்ற பின், கோயிலில் பின்பற்றப்பட்டு வரும் மரபு மற்றும் கடந்த குடமுழுக்கு பழக்க வழக்கங்கள், பாராம்பரிய நடைமுறைகளின்படி, சுவாமிக்கு அபிஷேகங்கள், எண்வகை மருந்து சாத்துதல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். அதற்கு பின்னரே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










