» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் : ஆட்சியரிடம் பாஜக சார்பில் கோரிக்கை!
திங்கள் 16, ஜூன் 2025 3:51:06 PM (IST)

மருதூர் மேலக்கால் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணையில் கார் கால சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தெற்கு மாவட்ட பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பாஜக நிர்வாகிகள் அளித்த மனுவில், "மருதூர் மேலக்கால் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணையின் தென்காலினை உடனடியாக திறந்து 25ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களில் கார்கால சாகுபடியில் விவசாயப் பெருமக்கள் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும்.
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள தெற்கு மண்டல குப்பை மறுசுழற்சி மைய நுழைவு வாயிலை அதன் பின்புறம் உள்ள தொழில் புறம்போக்கு இடத்தின் வழியாக மாற்ற வேண்டும். திருநெல்வேலி - திருச்செந்தூர் மற்றும் திருச்செந்தூர்-திருநெல்வேலி செல்லும் அனைத்து பேருந்துகளையும் தென்திருப்பேரை பேருந்து நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொதுச் செயலாலர் ஆறுமுகம், மாவட்ட துனை தலைவர்கள் சிவராமன், மாசானம், மாவட்ட பொருளாளர் பரமசிவன், மண்டல் தலைவர்கள் மாதவன், மணிகண்டன், சிவஜோதி பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










