» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மைசூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் அதிகரிப்பு: 20 நிமிடம் முன்கூட்டியே வந்துசேரும்!
செவ்வாய் 13, மே 2025 9:06:59 AM (IST)
மைசூர்-தூத்துக்குடி ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால், ரயில் 20 நிமிடம் முன்கூட்டியே தூத்துக்குடியை வந்தடைகிறது.
தூத்துக்குடியில் இருந்து சென்னை, மைசூர், மேட்டுப்பாளையம், பாலக்காடு, நெல்லைக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மைசூர்-தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் காலையில் விரைவாக தூத்துக்குடியை வந்தடைய வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மைசூரில் இருந்து தூத்துக்குடி வரும் ரயில் (16236) வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி மைசூரில் இருந்து மாலை 6.20-க்கும் புறப்படும் ரயில் வேகம் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் திண்டுக்கல்லுக்கு 6.17-க்கு பதிலாக 6.03-க்கு வந்து சேருகிறது. தொடர்ந்து தூத்துக்குடிக்கு 10.35-க்கு பதிலாக 10.15 மணிக்கு வந்து சேருகிறது. இதனால் 20 நிமிடங்கள் முன்கூட்டியே தூத்துக்குடியை வந்தடைகிறது. இந்த நேர மாற்றம் 11.7.2025 முதல் அமலுக்கு வரும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










