» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மைசூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் அதிகரிப்பு: 20 நிமிடம் முன்கூட்டியே வந்துசேரும்!

செவ்வாய் 13, மே 2025 9:06:59 AM (IST)

மைசூர்-தூத்துக்குடி ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால், ரயில் 20 நிமிடம் முன்கூட்டியே தூத்துக்குடியை வந்தடைகிறது.

தூத்துக்குடியில் இருந்து சென்னை, மைசூர், மேட்டுப்பாளையம், பாலக்காடு, நெல்லைக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மைசூர்-தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் காலையில் விரைவாக தூத்துக்குடியை வந்தடைய வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மைசூரில் இருந்து தூத்துக்குடி வரும் ரயில் (16236) வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி மைசூரில் இருந்து மாலை 6.20-க்கும் புறப்படும் ரயில் வேகம் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் திண்டுக்கல்லுக்கு 6.17-க்கு பதிலாக 6.03-க்கு வந்து சேருகிறது. தொடர்ந்து தூத்துக்குடிக்கு 10.35-க்கு பதிலாக 10.15 மணிக்கு வந்து சேருகிறது. இதனால் 20 நிமிடங்கள் முன்கூட்டியே தூத்துக்குடியை வந்தடைகிறது. இந்த நேர மாற்றம் 11.7.2025 முதல் அமலுக்கு வரும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory