» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேசிய தடகள விளையாட்டுப் போட்டியில் பதக்கம்: வீராங்கனைக்கு அமைச்சர் கீதா ஜீவன் பாராட்டு

வெள்ளி 7, மார்ச் 2025 4:32:00 PM (IST)



தேசிய தடகள விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தூத்துக்குடி வீராங்கனைக்கு அமைச்சர் கீதா ஜீவன் பாராட்டு தெரிவித்தார். 

தேசிய அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான 23 வது தேசிய தடகள விளையாட்டுப் போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்துமீனா என்ற வீராங்கனை, குண்டு எறிதல் போட்டியில் தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார். இதனையடுத்து  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர்  கீதா ஜீவன் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார். 

இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்க செயலாளர்  ஸ்டீபன் மற்றும் துணைத் தலைவர் கிறிஸ்டோபர் விஜயராஜ்  உடன் இருந்தனர்.  மேலும் மாவட்ட பாரா விளையாட்டு சங்கத்தின் தலைவர் முகமது நசீர், துணைத் தலைவர் கான்ஸ்டன்ட், துணைச் செயலாளர் ஜெயலட்சுமி, பொருளாளர் நீலராஜன், ஈசி மெம்பர் ரிஹானா பர்வீன், மற்றும்  மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஆண்டனி அதிர்ஷ்டராஜ் ஆகியோர் பாராட்டினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory