» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மானிய சிலிண்டர் பெற பயனாளி விபரங்களை புதுப்பிக்க வேண்டும் : ஆட்சியர் அறிவிப்பு

வெள்ளி 7, மார்ச் 2025 4:10:18 PM (IST)

பாரத பிரதமரின் உஜ்வலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் எரிவாயு உருளை இணைப்பு பெற்ற பயனாளிகள் ஆதார் அட்டை எண்ணுடன் தங்களது பயனாளி விபரங்களை (e-KYC)  உடனடியாக புதுப்பிக்க  வேண்டும் என தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

பாரத பிரதமரின் உஜ்வலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் எரிவாயு உருளைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எரிவாயு உருளை இணைப்பு பெற்ற பயனாளிகள் பலர், தங்களது முதல் எரிவாயு உருளைக்கு பிறகு நீண்ட காலமாக மாற்று எரிவாயு உருளை பெறாமல் உள்ளனர்.  இவர்களுக்கு பாரத்  பெட்ரோலியம் நிறுவனத்திடமிருந்து தனித்தனியாக நினைவூட்டு கடிதம் அனுப்பப்பட உள்ளது.

எனவே இக்கடிதம் கிடைக்கப் பெற்ற 15 தினங்களுக்குள் பயனாளிகள் சம்பந்தப்பட்ட எரிவாயு முகவரிடம் தங்களது ஆதார் அட்டை எண்ணுடன் தங்களது  பயனாளி விபரங்களை (e-KYC)  உடனடியாக புதுப்பிக்க கேட்டுக்  கொள்ளப்படுகிறது,  தவறும் பட்சத்தில் உஜ்வலா திட்டத்தின் கீழ் இணைப்பு  பெற்ற பயனாளிகளின் எரிவாயு இணைப்புகள் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,   தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory