» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் சர்வதேச மகளிர் தின விழா

வெள்ளி 7, மார்ச் 2025 3:01:07 PM (IST)



கோவில்பட்டியில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் 57 விவசாய பெண்மணிகளுக்கு கிரீடம் அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ஆசியா பார்ம்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடந்த மகளிர் தின விழாவில் கருப்பூர், லிங்கம்பட்டி, இளம்புவனம், ஊத்துப்பட்டி, கழுகுமலை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 57 விவசாய பெண்மணிகளுக்கு கிரீடம் அணிவித்து நினைவு பரிசு வழங்கி மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஆசியா பார்ம்ஸ் பாபு தலைமை வகித்தார். வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், ஆசியா கேண்டி நிறுவனர் பத்மா பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆசியா பார்ம்ஸ் நிறுவன பணியாளர் மேக்சி வரவேற்றார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி பாக்யாது சாலிகா  கலந்து கொண்டு 57 விவசாய பெண்மணிகளுக்கு கிரீடம் அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி பேசினார். இதில் ஆசியா பார்ம்ஸ் நிறுவன பணியாளர்கள் மோகனா,முரளி,சுரேஷ், மாரி செல்வம். உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஆசியாபார்ம்ஸ் நிறுவன பணியாளர் முருகன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory