» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 800 கிலோ கடல் அட்டை பறிமுதல் : 2பேர் கைது

வெள்ளி 7, மார்ச் 2025 11:37:52 AM (IST)



தூத்துக்குடியில் 800கிலோ கடல் அட்டைகளை மரைன் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 2பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மரைன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, மற்றும் எஸ்ஐ முத்துமாரி தேவேந்திரர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது புதுக்கோட்டை ஜோதி நகர் பகுதியில் உள்ள குடோனில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர். அதில் இருந்த பிளாஸ்டிக் கேன்களில் கடல் அட்டைகள் இருந்தன. 

மொத்தம் 800 கிலோ கடல் அட்டைகளையும், அதனை கடத்துவதற்கு பயன்படுத்திய சரக்கு வாகனம், ஆம்னி கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.  இது தொடர்பாக தெரசா புரத்தைச் சேர்ந்த ஹபீப் ரஹ்மான் (38), கயத்தாறைச் சேர்ந்த கண்ணன் என்ற அருணாச்சலம் (47) ஆகிய 2பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் வனத்துறை ஆய்வாளர் பாபுவிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இது தொடர்பாக மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய பூங்கா வனத்துறையினர் இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory