» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது : 1 கிலோ கஞ்சா பறிமுதல்!

வெள்ளி 7, மார்ச் 2025 9:08:02 AM (IST)



கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புறவழிச்சாலையில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக டிஎஸ்பி ஜெகநாதனுக்கு தகவல் கிடைத்து. இதை தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் புறவழிச்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அங்குள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். தனிப்படை போலீசார் அந்த 2பேரையும் துரத்தி சென்று பிடித்து சோதனை நடத்தினர். அப்போது, அந்த 2 பேரிடமும் விற்பனைக்கு வைத்திருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கோவில்பட்டி காமராஜ் நகரைச் சேர்ந்த பலவேசம் மகன் யுவன் பரத் (20), லிங்கம்பட்டியைச் சேர்ந்த போஸ் மகன் சுரேஷ் (22) என்பதும், இருவரும் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. பின்னர் 2பேரையும், பறிமுதல் செய்த கஞ்சாவையும் மேற்கு போலீசாரிடம், தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த 2 பேரையும் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory