» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்: ஓட்டப்பிடாரம் அருகே சோகம்
வெள்ளி 7, மார்ச் 2025 9:05:52 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த துக்கத்திலும் அவரது மகன் பிளஸ்-2தேர்வு எழுதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சில்லாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. கூலித்தொழிலாளியான இவரது மனைவி சிவனம்மாள். இவர்களுக்கு கதிரவன் என்ற மகனும், எழிலரசி என்ற மகளும் உள்ளனர். கதிரவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பும், எழிலரசி 10-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
கருப்பசாமி சிறுநீரக பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அவர் பரிதாபமாக இறந்தார். உடலை பார்த்து மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். தற்போது பிளஸ்-2 தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று ஆங்கில தேர்வு நடந்தது. தந்தை இறந்த துக்கத்திலும் கதிரவன் பள்ளிக்கு சென்று தேர்வு எழுதினார்.
தேர்வு முடிந்து மதியம் வீட்டிற்கு வந்த அவரை, அவரது தங்கை எழிலரசி கட்டிப்பிடித்து கதறி அழுதார். இது அங்கிருந்த அனைவருக்கும் கண்ணீரை வரவழைத்தது. உறவினர்கள், 2 பேருக்கும் ஆறுதல் கூறி தேற்றினார்கள். தொடர்ந்து கருப்பசாமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கருணாநிதி நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:38:24 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)

தூத்துக்குடி பிரதான சாலையில் தேங்கி கிடக்கும் வாகனங்கள், குப்பைகள்: அப்புறப்படுத்த கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:13:58 AM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு விற்பனை!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:34:38 AM (IST)

பைக் விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சாவு: மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை!
திங்கள் 22, டிசம்பர் 2025 7:58:23 AM (IST)

உலகெங்கும் பரவுகிறது விதைப்பந்து புரட்சி!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 8:40:08 PM (IST)










