» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் லாரி மோதி மீனவர் பலி

புதன் 26, பிப்ரவரி 2025 11:26:43 AM (IST)

தூத்துக்குடியில் சாலையை கடக்க முயன்றபோது லாரி மோதி மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி பேரூரணி ராஜாராம் நகரைச் சேர்ந்தவர் குமராண்டி மகன் அய்யனார் (45). காது கேளாத வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளியான இவர், கடலுக்கு மீன்பிடிக்க சென்று வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். நேற்று இரவு 9 மணியளவில் வேலை முடிந்து தூத்துக்குடி துறைமுகம் சாலையில் நடந்து சென்றபோது அவ்வழிய வேகமாக வந்த டாரஸ் லாரி அவர் மீது மோதியது. 

இதில் பலத்த காயம் அடைந்த அய்யனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 4வது தெருவைச் சேர்ந்த செல்லப்பா மகன் அருண்குமார் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory