» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

சாத்தான்குளத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காந்திநகர் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் சுடலைமுத்து (30). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ராமலட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் வீரப்பாகு மகன் சுந்தர் (42), நாசரேத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் (24). இவர்கள் இருவரும் சாத்தான்குளம் தட்சமொழி முதலூர் சாலையில் செயல்படும் மதுபான கூடத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

அந்த பாரில் நடந்த பிரச்சினை தொடர்பாக நேற்று முன்தினம் காலை சுந்தரும், ஜெகதீசும் சேர்ந்து சுடலைமுத்துவை ஓட, ஓட விரட்டி சென்று அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். அவர்கள் 2 பேர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக சாத்தான்குளத்தை சேர்ந்த அருணாச்சலம், மதுபான கூடத்தின் உரிமையாளர் செல்வகுமார், ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் சுந்தர், ஜெகதீஷ் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், அருணாச்சலத்தை போலீசார் நேற்று கைது செய்தனர். செல்வகுமாரை தேடி வருகின்றனர். இதற்கிடையே சுடலைமுத்துவின் உடல் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நேற்று காலையிலும் 2-வது நாளாக உறவினர்கள் சாத்தான்குளம் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளித்தனர். அவர்களிடம் திருச்செந்தூர் உதவி கலெக்டர் கவுதம், சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு வேலை, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கலைஞர் கனவு இல்லம் வீடு, குழந்தைகள் படிப்பிற்கு கல்வி உதவித்தொகை, மாதம் தோறும் பென்ஷன் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதன் பேரில் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு சுடலைமுத்துவின் உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர். இதற்கிடையே அவரின் மனைவிக்கு வன்கொடுமை சட்டத்தின் கீழ் முதற்கட்ட தொகையான ரூ.6 லட்சத்தை திருச்செந்தூர் உதவி கலெக்டர் கவுதம் வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory