» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாயமான தனியார் நிறுவன ஊழியர் சடலமாக மீட்பு : போலீஸ் விசாரணை!

புதன் 26, பிப்ரவரி 2025 11:13:45 AM (IST)

கடம்பூர் அருகே மாயமான தனியார் நிறுவன ஊழியர் முட்புதரில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர், பசுவந்தனை ரோடு, ரயில்வே கேட் அருகே முட்புதரில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக கடம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

விசாரணையில் அவர் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 6ஆவது தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் சங்கர் (50) என்பது தெரியவந்தது. இவர் ஓட்டப்பிடாரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த 1ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 15ம் தேதி மருத்துவமனையில் இருந்து காணாமல் போய்விட்டார். 

இதுகுறித்து அவரது மனைவி சசிகலா கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கடந்த 13ஆம் தேதி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சங்கர் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory