» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலையை விரிவுபடுத்தக்கோரி காத்திருக்கும் போராட்டம் : மந்தித்தோப்பு பகுதி மக்கள் அறிவிப்பு

புதன் 26, பிப்ரவரி 2025 10:51:10 AM (IST)

கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டை விரிவுபடுத்தக்கோரி நாளை காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள், பள்ளி மாணவர்கள் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க சாலையை விரிவுபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் குறுகலான பகுதியை போர்க்கால அடிப்படையில் விரிவாக்கம் செய்திட வலியுறுத்தி நாளை (பிப்.27) வியாழன் காலை 10 மணி முதல் பிருந்தா சூப்பர் மார்கெட் அருகில் காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம், அனைத்து பகுதி குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும், மந்தித்தோப்பு ரோடு அனைத்து பகுதி பொதுமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory