» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஓடும் பேருந்தில் பெண் திடீர் மரணம்
செவ்வாய் 25, பிப்ரவரி 2025 3:11:42 PM (IST)
தூத்துக்குடி ஓடும் பேருந்தில் பெண் திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஓட்டப்பிடாரத்திற்கு அரசு டவுன் பஸ் இன்று மதியம் ஒரு மணி அளவில் புறப்பட்டு சென்றது. இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் பஸ் சென்று கொண்டிருந்த போது டிரைவர் இருக்கைக்கு பின்புறம் இரண்டாவது இருக்கையில் அமர்ந்திருந்த சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் திடீரென பஸ்ஸில் மயங்கி விழுந்து இறந்தார்.
உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குசென்று விசாரணை நடத்தியதில் அந்த பெண் கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் புன்னைநகர் சேர்ந்த அருணாச்சலம் மனைவி கமலம்மாள் (72) என்று தெரியவந்தது.
ஓட்டப்பிடாரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வரும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










