» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஓடும் பேருந்தில் பெண் திடீர் மரணம்

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 3:11:42 PM (IST)

தூத்துக்குடி ஓடும் பேருந்தில் பெண் திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஓட்டப்பிடாரத்திற்கு அரசு டவுன் பஸ் இன்று மதியம் ஒரு மணி அளவில் புறப்பட்டு சென்றது. இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் பஸ் சென்று கொண்டிருந்த போது டிரைவர் இருக்கைக்கு பின்புறம் இரண்டாவது இருக்கையில் அமர்ந்திருந்த சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் திடீரென பஸ்ஸில் மயங்கி விழுந்து இறந்தார். 

உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குசென்று விசாரணை நடத்தியதில் அந்த பெண் கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் புன்னைநகர் சேர்ந்த அருணாச்சலம் மனைவி கமலம்மாள் (72) என்று தெரியவந்தது. 

ஓட்டப்பிடாரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வரும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory