» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்

சனி 20, டிசம்பர் 2025 6:23:18 PM (IST)



தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் மூன்றாவது நாளாக தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்களை பணி நிரந்தரம் செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார். 

ஆனால் நான்க‌ரை ஆண்டு காலம் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. செவிலிய பணியாளர்களை நிரந்தரம் ஆக்கவில்லை என்றும், காலி பணியிடங்கள் நிரப்பாததை அடுத்து கடந்த மூன்று தினங்களாக தமிழகம் முழுவதும் தொகுப்பு புதிய செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உள்ளே தொகுப்பூதிய செவிலியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மூன்றாவது நாளாக தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இது தொடர்பாக தொகுப்பூதிய செவிலியர்கள் கூறுகையில் 10 வருடங்களாக நாங்கள் தொகுப்பூதிய செவிலியராக பணியாற்றி வருகிறோம். சுகாதாரத்துறை அமைச்சர் காலிப் பணியிடங்கள் இல்லை என்று கூறுகிறார். காலி பணியிடங்களை நீங்கள் கூறவில்லை. அரசு மருத்துவமனையில் கட்டிடங்கள் தான் உயர்கிறது. எங்களுடைய வாழ்வாதாரம் உயரவில்லை. செவிலியர்கள் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. 2023 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி தமிழகத்தில் 18 ஆயிரம் செவிலியர்கள் காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதி 356 தொகுப்புதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் முதலமைச்சர் இன்று வரை எங்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. கொரோனா காலகட்டத்தில் எங்களது பணியை முதலமைச்சர் பாராட்டினார். ஆனால் நாங்கள் தற்போது தெருவில் வந்து போராடுகிறோம். தமிழக முதல்வர் கண்டு கொள்ளவில்லை. தமிழக முதலமைச்சர் துணை முதலமைச்சர் சுகாதாரத்துறை அமைச்சர் எங்களது கோரிக்கை நிறைவேற்ற வேண்டும். 

சுகாதாரத் துறை அமைச்சர் போராட்டம் எங்கும் நடைபெறவில்லை என்று கூறுகிறார். சுகாதாரத் துறை அமைச்சர் தொகுப்பு புதிய செவிலியர்கள் பணிக்கு திரும்பி விட்டார்கள் என்று கூறினார். நாங்கள் யாரும் பணிக்கு திரும்பவில்லை தமிழ்நாடு முழுவதும் 8000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தொகுப்பூதிய செவிலியர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory