» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மர்காஷிஸ் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கூடுகை!
செவ்வாய் 25, பிப்ரவரி 2025 11:22:23 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் பெற்றோர் - ஆசிரியர் கூடுகை நடைபெற்றது.
கல்லூரி பொறுப்பு முதல்வர் ஜீவி எஸ்தர் ரத்தினகுமாரி தலைமை வகித்து தலைமையுரை நிகழ்த்தினார். தமிழ்த்துறைத் தலைவர் பெரியநாயகம் ஜெயராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். பேராசிரியர் செல்வராஜ் ஐசக்ஆரம்ப ஜெபம் செய்து துவக்கினார். கல்லூரியின் செயல்பாடுகள் மாணவ மாணவிகள் ஒழுக்கம் கட்டுப்பாடுகளை பொருளியல் துறைத் தலைவரும் கல்லூரி நிதியாளர் பேராசிரியர் சுரேஷ் ஆபிரகாம் பெற்றோர்களுக்கு விளக்கிக் கூறினார்.
நூலகப் பயன்பாட்டின் அவசியத்தைப் பற்றி கல்லூரி நூலகர் முனைவர் ஜாய் சோபினி விளக்கினார். உடற்கல்வி இயக்குநர் முனைவர் ராஜாசிங் ரோக்லண்ட் விளையாட்டின் சிறப்பையும் அரசு வேலை வாய்ப்பில் அளிக்கப்படும் முன்னுரிமையினையும் பற்றி பேசினார். இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் கிரேஸ்லின் ஜூலியானா நிறைவு ஜெபம் செய்தார்.
இதில் 700 பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வரலாற்றுத்துறைத் தலைவர் தாமஸ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரிச் செயலர் வழக்கறிஞர் ரவிந்திரன் சார்லஸ் ஆலோசனையின்படி கல்லூரி பொறுப்பு முதல்வர் ஜீவி எஸ்தர் ரத்தினகுமாரி பேராசிரியர் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










