» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் விபத்தில் ஷிப்பிங் கம்பெனி ஊழியர் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 10:54:32 AM (IST)

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஷிப்பிங் கம்பெனி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் துரைமுருகன் (28), இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஷிப்பிங் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து ஊருக்கு செல்வதற்காக மோட்டார் பைக்கில் தூத்துக்குடி - பாளை., ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

அந்தோணியார் புரம் அருகே செல்லும்போது, பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயம் அடைந்த துரைமுருகனை, 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 4 மணி அளவில் அவர் இறந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory