» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் விபத்தில் ஷிப்பிங் கம்பெனி ஊழியர் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!
செவ்வாய் 25, பிப்ரவரி 2025 10:54:32 AM (IST)
தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஷிப்பிங் கம்பெனி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் துரைமுருகன் (28), இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஷிப்பிங் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து ஊருக்கு செல்வதற்காக மோட்டார் பைக்கில் தூத்துக்குடி - பாளை., ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அந்தோணியார் புரம் அருகே செல்லும்போது, பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயம் அடைந்த துரைமுருகனை, 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 4 மணி அளவில் அவர் இறந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










