» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது!

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 8:57:00 AM (IST)

குரும்பூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள பணிக்கநாடார் குடியிருப்பு கிராமத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 6 மாதமாக தற்காலிக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராமன் (42). இந்த நிலையில் அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ராமன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுபற்றி மாணவி, தனது தாயாரிடம் தெரிவித்தார். இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தாயார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவிக்கு ஆசிரியர் ராமன் மீது பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ராமனை கைது செய்தனர்.


மக்கள் கருத்து

makkalFeb 25, 2025 - 11:32:25 AM | Posted IP 162.1*****

daily ipdi oru sambavam nadanthutu thaan iruku.. ithuku oru mudive illaya ya.. kadumaiyaana thandanaiyaal matum thaan intha thavarugal meendum nadakama thaduka mudiyum..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory