» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நம்பர் பிளேட் இல்லாத 284 பைக்குகள் பறிமுதல்: தூத்துக்குடி மாவட்ட எஸ்பி தகவல்

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 8:42:17 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையினரின் வாகன சோதனையில், நம்பர் பிளேட் பொருத்தப்படாத 284 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், போலீசார் வாகன சோதனை, ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, கடந்த சனி, ஞாயிறு (பிப். 22, 23) ஆகிய 2 நாள்கள் மேற்கொண்ட வாகன சோதனையில், எண் பலகை இல்லாத 284 பைக்குகளைக் கண்டறிந்து, வழக்குப் பதிந்து பறிமுதல் செய்தனர்.

 265 பைக்குகளுக்கு அவற்றின் உரிமையாளர்கள் எண் பலகை மாட்டியதால், அவை விடுவிக்கப்பட்டன. சாலை விதிகளை மீறுவோர், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory