» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நம்பர் பிளேட் இல்லாத 284 பைக்குகள் பறிமுதல்: தூத்துக்குடி மாவட்ட எஸ்பி தகவல்
செவ்வாய் 25, பிப்ரவரி 2025 8:42:17 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையினரின் வாகன சோதனையில், நம்பர் பிளேட் பொருத்தப்படாத 284 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், போலீசார் வாகன சோதனை, ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, கடந்த சனி, ஞாயிறு (பிப். 22, 23) ஆகிய 2 நாள்கள் மேற்கொண்ட வாகன சோதனையில், எண் பலகை இல்லாத 284 பைக்குகளைக் கண்டறிந்து, வழக்குப் பதிந்து பறிமுதல் செய்தனர். 265 பைக்குகளுக்கு அவற்றின் உரிமையாளர்கள் எண் பலகை மாட்டியதால், அவை விடுவிக்கப்பட்டன. சாலை விதிகளை மீறுவோர், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்துமஸ் ஸ்டார் தொங்கவிட முயன்றவர் தவறி விழுந்து சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்
ஞாயிறு 21, டிசம்பர் 2025 11:54:46 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: கல்லூரி மாணவர்கள் 3 பேர் படுகாயம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:50:56 AM (IST)

பாரதியாரை இழிவுபடுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.கவினர் காவல் நிலையத்தில் புகார்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:45:17 AM (IST)

வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ஞாயிறு 21, டிசம்பர் 2025 9:16:00 AM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)










